Global Notification

நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மகாலட்சுமியை வசியம் செய்து கொள்ள மார்வாடிகள் பயன்படுத்தும் சூட்சுமமான ரகசியம்
0.0

நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மகாலட்சுமியை வசியம் செய்து கொள்ள மார்வாடிகள் பயன்படுத்தும் சூட்சுமமான ரகசியம்

Baca நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மகாலட்சுமியை வசியம் செய்து கொள்ள மார்வாடிகள் பயன்படுத்தும் சூட்சுமமான ரகசியம்

Baca Komik நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மகாலட்சுமியை வசியம் செய்து கொள்ள மார்வாடிகள் பயன்படுத்தும் சூட்சுமமான ரகசியம் bahasa Indonesia lengkap dan baru di Slogam. Kami menyediakan Komik, Manhua, Manhwa, dan Novel yang dapat kalian baca online gratis.

Read நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மகாலட்சுமியை வசியம் செய்து கொள்ள மார்வாடிகள் பயன்படுத்தும் சூட்சுமமான ரகசியம்

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வேண்டும். கோடி கோடியாக லட்சம் லட்சமாக லாபம் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்பவர்களாக இருந்தால் வருமானம் இரட்டிப்பாக பெருகிக் கொண்டே செல்ல வேண்டும். வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு தொழில் செய்து, அதன் மூலம் வருமானத்தை ஈட்ட வேண்டும். வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்கக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். முதலில் மகா லட்சுமியை நம் வசியம் செய்து கொள்ள வேண்டும். வசியம் என்றால் தவறான வார்த்தை கிடையாது. மகாலட்சுமி நாம் செய்யக்கூடிய பூஜைக்கு மனம் மயங்கி நம் வீட்டிலேயே தங்கி விட வேண்டும். இதைத்தான் வசியம் என்று சொல்கிறார்கள். மகாலட்சுமி வசியப்படுத்த கூடிய சக்தி வாய்ந்த ஒரு பூஜை முறையைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக வட இந்தியர்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வெள்ளிக்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு 6 மணிக்கு உங்களுடைய பூஜையை தொடங்கி இருக்க வேண்டும். முந்தைய நாளே பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் காலையில் நெய் ஊற்றி ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வாசனை நிறைந்த பூக்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்துவிட்டு, மல்லிகைப்பூவை மகாலட்சுமிக்கு சாத்திவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். இந்த பூஜைக்கு ஒரு டம்ளர் சுத்தமான பசும்பால் தேவை. வெதுவெதுப்பாக காய்ச்சி இருக்கும் பசும்பாலில் கற்கண்டு சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு,பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை, போட்டு கலந்து மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்துக்கொள்ளுங்கள். பால்பாயசம் செய்தாலும் சிறப்பு தான். நீங்கள் மகாலட்சுமி தாயாரின் முன்பு அமர்ந்து கொண்டு மகாலட்சுமி தாயை முழுமையாக நம்பி வரங்களை கேட்க வேண்டும். என்ன வரம் தேவையோ, உங்களுக்கு தேவையான காசு பணம் நகை சொத்து சுகம், எதை வேண்டும் என்றாலும் கேளுங்கள். தவறு கிடையாது. அது உங்களுடைய தகுதிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வளவு சொத்து சுகத்தை வாங்க வசதி வாய்ப்புகள் உங்களுக்கு கொஞ்சம் குறைவாக இருந்தால், தகுதியை உயர்த்திக் கொள்ள என்ன வழியோ அந்த வேண்டுதலை வையுங்கள். அதன் பின்பு மகாலட்சுமிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்காக மகாலட்சுமியை வசியம் மந்திரம்: ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ மந்திரத்தை உச்சரித்து விட்டு இறுதியாக வாசனை மிகுந்த தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நிவேதனமாக வைத்த பால் பாயசத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக குடித்து விடலாம். வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை நிறைவு செய்து கொள்வது சிறப்பு. முடியாதவர்கள் மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த பூஜையை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். நேரம் இருப்பவர்கள் தினந்தோறும் காலையில் மகாலட்சுமியை வணங்கி விட்டு 3 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் தவறு கிடையாது. எவ்வளவுக்கு எவ்வளவு இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து மகாலட்சுமி நினைத்து வழிபாடு செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய வீட்டில் வறுமை நீங்கும். லட்சுமி கடாட்சம் பிறக்கும். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். நம்பியவர்களுக்கு மட்டும்.

Rekomendasi

Comments (0)

Sorted by